Lyrics

ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா கையில் தந்தேன் கல்யாணமாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா கையில் தந்தாய் கல்யாணமாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா ஆண்: நீ சிரிக்க நான் அணைக்க பூ மணக்க தேன் கொடுக்க பெண்: தேன் கொடுத்து நீ எடுக்க நாள் முழுதும் நான் மயங்க ஆண்: பார் கடல் போலேதான் நீயிருக்க பாய்மரக் கலம் போலே நான் மிதக்க பெண்: ராத்திரி தூங்காமல் நான் தவிக்க ராஜனின் லீலைகள் நோய் தணிக்க ஆண்: வெட்கம் தீர நான் உன்னைச் சேர தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா ஆண்: கையில் தந்தேன் கல்யாணமாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா பெண்குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ பெண்: மன்னவனுக்கும் மன்னவனே என் மனதின் நாயகனே ஆண்: என்னழகு கண்ணின் மணி உன்னழகு பொன்னின் மணி பெண்: வான் மழை மேகங்கள் நீர்த் தெளிக்க வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க ஆண்: வாலிப ராகங்கள் நான் படிக்க நூலிடை தாளாமல் நீ துடிக்க பெண்: சின்னப் பூவை தேன் வெண்ணிலாவை தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா கையில் தந்தேன் கல்யாணமாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா கையில் தந்தாய் கல்யாணமாலை மையல் கொண்டேன் நான் இந்த வேளை ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out