Lyrics
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் அவன்
ஏனோ மரம் போல் வளா்ந்து விட்டான்
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் அவன்
ஏனோ மரம் போல் வளா்ந்து விட்டான்
எதிலும் அச்சம் எதிலும் ஐயம் எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான்
எதிலும் அச்சம் எதிலும் ஐயம் எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான்
தன் இயற்கை அறிவை மடமை என்னும் பனித்திரையாலே மூடுகிறான்
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் அவன்
ஏனோ மரம் போல் வளா்ந்து விட்டான்
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள் பெருமை என்று பேசுகிறான்
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள் பெருமை என்று பேசுகிறான்
பெண் பேதைகள் என்றும் பேடிகள் என்றும் மறுநாள் அவனே ஏசுகிறான்
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் அவன்
ஏனோ மரம் போல் வளா்ந்து விட்டான்
நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும் நன்றி என்னும் குணம் நிறைந்திருக்கும்
நாியாய் அவனே உருவெடுத்தாலும் தந்திரமாவது தொிந்திருக்கும்
காக்கை குலமாய் அவதாித்தாலும் ஓற்றுமையாவது வளா்ந்திருக்கும்
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால் கடுகளவாவது பயனிருக்கும்
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும் அறிந்தே மனிதன் பிறந்துவிட்டான்
அந்த ஆறாம் அறிவை தேறா அறிவாய் அவனே வெளியில் விட்டுவிட்டான்
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் அவன்
ஏனோ மரம் போல் வளா்ந்து விட்டான்
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் அவன்
ஏனோ மரம் போல் வளா்ந்து விட்டான்
Writer(s): K V Mahadevan, Kannadhasan
Lyrics powered by www.musixmatch.com